sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மீன்கடை ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது

/

மீன்கடை ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது

மீன்கடை ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது

மீன்கடை ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது


ADDED : மார் 26, 2025 12:16 AM

Google News

ADDED : மார் 26, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவான்மியூர், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல், 18. மெரினா மணற்பரப்பில் உள்ள மீன்கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் சுபாஷ் சந்திரபோஸ் சிலை பின்புறம் மணற்பரப்பில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் அவரை எழுப்பி கத்தியால் தாக்கி, 1,250 ரூபாயை பறித்துச் சென்றார்.

இதில் காயமடைந்த சாமுவேல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

மெரினா காவல் நிலையத்தில் அளித்த புகார்படி வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கடலுார் திட்டக்குடியைச் சேர்ந்த மகேந்திரன், 32 என்பவர் கத்தியால் தாக்கி பணம் பறித்துச் சென்றது தெரிந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்து, 700 ரூபாய் மற்றும் கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர். மகேந்திரன் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது.

***






      Dinamalar
      Follow us