/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உணவு டெலிவரி ஊழியரிடம் போன் திருடிய நபர் கைது
/
உணவு டெலிவரி ஊழியரிடம் போன் திருடிய நபர் கைது
ADDED : அக் 07, 2024 01:07 AM
அயனாவரம்:'டாஸ்மாக்' மதுக்கூடத்தில், உணவு 'டெலிவரி' ஊழியரின் மொபைல் போனை திருடியவரை, போலீசார் கைது செய்தனர்.
அயனாவரம் திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் லுார்து நாதன், 34; 'சுவிக்கி' நிறுவன 'டெலிவரி' ஊழியர்.
இவர், கடந்த 30ம் தேதி, அயனாவரம் கே.எச்., சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றார். அப்போது, லுார்துநாதனின் அருகே நின்ற நபர், அவரின் மொபைல்போனை திருடிச் சென்றார்.
கடந்த 2ம் தேதி, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சம்பவத்தில் ஈடுபட்டோர் நேற்று முன்தினம் கடைக்கு வந்த போது, ஒருவரை மடக்கிப் பிடித்தார்; மற்றொருவர் தப்பினார். அவரை அயனாவரம் போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் பிடிபட்டவர் திருவொற்றியூர் தேரடியைச் சேர்ந்த சூர்யா, 24, என்பதும், அவர் மீது வழக்கு உள்ளதும் தெரிந்தது.
இதையடுத்து, சூர்யாவை கைது செய்த போலீசார், தலைமறைவான சந்தோஷ், 24, என்பவரை தேடி வருகின்றனர்.