sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயில் மோதி இறந்தவர் அடையாளம் தெரிந்தது

/

ரயில் மோதி இறந்தவர் அடையாளம் தெரிந்தது

ரயில் மோதி இறந்தவர் அடையாளம் தெரிந்தது

ரயில் மோதி இறந்தவர் அடையாளம் தெரிந்தது


ADDED : டிச 17, 2024 12:18 AM

Google News

ADDED : டிச 17, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி ரயில் நிலைய கேட் அருகே, கடந்த 14ம் தேதி இரவு, 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், சென்னை சென்ற மின்சார ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடலை கைப்பற்றிய ஆவடி ரயில்வே போலீசார், இறந்தது யார் என விசாரித்தனர். இதில், ரயிலில் அடிபட்டு இறந்தது, திருவள்ளூரைச் சேர்ந்த டில்லிபாபு, 35, என ரயில்வே போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த 14ம் தேதி, ஆவடியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த டில்லிபாபு, மீண்டும் திருவள்ளூர் செல்ல ஆவடி ரயில் நிலையம் வந்துள்ளார்.

அப்போது, திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில் வரவே, அதை பிடிக்க வேண்டும் என, தண்டவாளத்தில் ஓடியுள்ளார்.

அப்போது சென்னை நோக்கி சென்ற மின்சார ரயில், மோதி அவர் இறந்தது, விசாரணையில் தெரிய வந்தது.

மற்றொரு சம்பவம்


பட்டாபிராம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அஜித் தாமஸ், 39; திருமணமாகாதவர். மது போதைக்கு அடிமையான இவர், குடித்து விட்டு, நேற்று இரவு பட்டாபிராம் ரயில்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பட்டாபிராம் சைடிங்கில் இருந்து, சென்னை சென்ட்ரல் சென்ற மின்சார ரயில் மோதியதில், அஜித் தாமஸ் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us