sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

21 ஆண்டுகள் போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது

/

21 ஆண்டுகள் போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது

21 ஆண்டுகள் போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது

21 ஆண்டுகள் போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது


ADDED : ஆக 13, 2025 04:02 AM

Google News

ADDED : ஆக 13, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஆக. 13-

கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், போலீசாருக்கு 21 ஆண்டுகள் 'தண்ணி' காட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவொற்றியூரில், 2004ம் ஆண்டு நடந்த பிலால் ரவி என்பவர் கொலை வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த மாடு ரமேஷ் கைது செய்யப்பட்டார்.

ஜாமினில் வெளி வந்தபின், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், 21 ஆண்டுகளாக போலீசாருக்கு 'தண்ணி' காட்டி வந்துள்ளார். இதனால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில், மாடு ரமேஷ், திருவள்ளூர் மணவாளநகர், தாம்பரம், திருவல்லிக்கேணி என, பல இடங்களுக்கு மாறிச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில், புதுப்பேட்டை கோமலீஸ்வரன் பேட்டை போலீஸ் பூத் அருகே, வலது காலில் வெட்டுக்காய தழும்புடன், மர்ம நபர் போதையில் துாங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மாடு ரமேஷ், 53, என்பது தெரியவந்தது.

இவர், துவக்க காலத்தில் மாடு திருடி வந்ததால், பெயருக்கு முன் மாடு என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுவதும் தெரிய வந்தது. இவரை கைது செய்து, திருவொற்றியூர் போலீசாரிடம் நேற்று ஒப்படைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us