sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க மணலிபுதுநகர் மக்கள் கோரிக்கை

/

மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க மணலிபுதுநகர் மக்கள் கோரிக்கை

மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க மணலிபுதுநகர் மக்கள் கோரிக்கை

மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க மணலிபுதுநகர் மக்கள் கோரிக்கை


ADDED : பிப் 06, 2024 12:56 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலிபுதுநகர், மணலிபுதுநகருக்கு, மெட்ரோ ரயில் இயக்க கோரி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணலி மண்டலம், 15, 16 ஆகிய வார்டுகளை உள்ளிடக்கிய மணலிபுதுநகர் பகுதியில், 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த மக்கள், மெட்ரோ ரயில் சேவையை பெற, திருவொற்றியூர் - விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையம் செல்ல வேண்டியுள்ளது.

மணலியில் இருந்து, மெட்ரோ ரயில் சேவையை இணைக்கும் வகையில், சிற்றுந்துகள் இயக்கப்படும் நிலையில், மணலிபுதுநகர் மக்களுக்கென தனி பேருந்து வசதிகள் ஏதும் கிடையாது.

மாறாக, மாநகர பேருந்து வசதிகள் மட்டுமே உள்ளன.

நுாற்றுக்கணக்கான தொழிற்சாலைகள், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் உட்பட மக்கள் வரத்து அதிகம் இருக்கும் மணலிபுதுநகருக்கு, போக்குவரத்து வசதி மிகக் குறைவாக உள்ளது.

எனவே, மெட்ரோ ரயில் சேவையை, விம்கோ நகரில் இருந்து, சடையங்குப்பம் - பர்மா நகர் வழியாக மணலிபுதுநகரை இணைத்து, மாதவரம் மெட்ரோ ரயில் வழித்தடத்துடன் இணையும்படி செய்ய வேண்டும்.

இதுபோன்ற நிலை அமைந்தால், மணலிபுதுநகரைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us