/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க மணலிபுதுநகர் மக்கள் கோரிக்கை
/
மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க மணலிபுதுநகர் மக்கள் கோரிக்கை
மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க மணலிபுதுநகர் மக்கள் கோரிக்கை
மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க மணலிபுதுநகர் மக்கள் கோரிக்கை
ADDED : பிப் 06, 2024 12:56 AM
மணலிபுதுநகர், மணலிபுதுநகருக்கு, மெட்ரோ ரயில் இயக்க கோரி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணலி மண்டலம், 15, 16 ஆகிய வார்டுகளை உள்ளிடக்கிய மணலிபுதுநகர் பகுதியில், 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த மக்கள், மெட்ரோ ரயில் சேவையை பெற, திருவொற்றியூர் - விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையம் செல்ல வேண்டியுள்ளது.
மணலியில் இருந்து, மெட்ரோ ரயில் சேவையை இணைக்கும் வகையில், சிற்றுந்துகள் இயக்கப்படும் நிலையில், மணலிபுதுநகர் மக்களுக்கென தனி பேருந்து வசதிகள் ஏதும் கிடையாது.
மாறாக, மாநகர பேருந்து வசதிகள் மட்டுமே உள்ளன.
நுாற்றுக்கணக்கான தொழிற்சாலைகள், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் உட்பட மக்கள் வரத்து அதிகம் இருக்கும் மணலிபுதுநகருக்கு, போக்குவரத்து வசதி மிகக் குறைவாக உள்ளது.
எனவே, மெட்ரோ ரயில் சேவையை, விம்கோ நகரில் இருந்து, சடையங்குப்பம் - பர்மா நகர் வழியாக மணலிபுதுநகரை இணைத்து, மாதவரம் மெட்ரோ ரயில் வழித்தடத்துடன் இணையும்படி செய்ய வேண்டும்.
இதுபோன்ற நிலை அமைந்தால், மணலிபுதுநகரைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.