/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகிங்ஹாம் கால்வாயில் மிதந்த ஆண் சடலம்
/
பகிங்ஹாம் கால்வாயில் மிதந்த ஆண் சடலம்
ADDED : டிச 08, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பகிங்ஹாம் கால்வாயில் மிதந்த ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, பேசின் பிரிட்ஜ் - பகிங்ஹாம் கால்வாயில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, நேற்று காலை வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் தீயணைப்பு நிலைய வீரர்களுடன் சடலத்தை மீட்டனர்.
போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து, இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

