/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆண்கள் விடுதி கண்காணிப்பாளர் மர்ம மரணம்
/
ஆண்கள் விடுதி கண்காணிப்பாளர் மர்ம மரணம்
ADDED : ஜன 16, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார், வில்லேஜ் சாலையில் மகேஷ் என்ற பெயரில் ஆண்கள் விடுதி உள்ளது. இங்கு, பத்து நாட்களுக்குமுன், சந்திரபாபு என்ற ஏஜன்ட் வாயிலாக, பீகார் மாநிலம், ருத்ரபூரை சேர்ந்த வினோத்குமார், 28, என்பவர் கண்காணிப்பாளர் பணிக்கு சேர்ந்தார். இவர், நேற்றுகாலை, விடுதி கழிப்பறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
செம்மஞ்சேரி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மரணத்தில் சந்தேகம் இருப்பதால், மகேஷ், சந்திரபாபு ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

