/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரல் - ஏர்போர்ட் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
/
சென்ட்ரல் - ஏர்போர்ட் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
சென்ட்ரல் - ஏர்போர்ட் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
சென்ட்ரல் - ஏர்போர்ட் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
ADDED : டிச 31, 2025 03:59 AM
சென்னை: தொழில்நுட்ப கோளாறால், சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை, நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆலந்துார் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில், நேற்று காலை 6:00 மணிக்கு, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் நேரடி மெட்ரோ ரயில் சேவை, கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக, விமான நிலையம் பயணம் மேற்கொள்ள முடியாமல், பயணியர் தவித்தனர்.
அவர்கள் அனைவரும், ஆலந்துாரில் இறங்கி, நீலவழித்தடத்தில் இயக்கப்படும் விம்கோ நகர் - விமான நிலையம் ரயில் தடத்தில் பயணம் மேற்கொண்டனர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பச்சை வழித்தடத்தில், சென்ட்ரல் - விமான நிலைய நேரடி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணிகள் நடக்கின்றன.
பச்சை வழித்தடத்தில், சென்ட்ரல் - பரங்கிமலை சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

