/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாயமான சிறுமி 2 ஆண்டுக்கு பின் கடலுாரில் மீட்பு
/
மாயமான சிறுமி 2 ஆண்டுக்கு பின் கடலுாரில் மீட்பு
ADDED : ஏப் 19, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரும்பாக்கம், அரும்பாக்கத்தில் மாயமான சிறுமி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கடலுாரில் மீட்கப்பட்டார்.
அரும்பாக்கத்தை சேர்ந்த பெண்ணின், 13 வயது மகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன், பள்ளிக்கு சென்றபோது மாயமானார். அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இரண்டு ஆண்டுகளாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கடலுாரில் உள்ள காப்பகத்தில், சிறுமி பத்திரமாக இருப்பது தெரியவந்தது. கடலுார் விரைந்த போலீசார், சிறுமியை மீட்டு தாயாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
***

