sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ம.நீ.ம., பெண் நிர்வாகி ஆட்டோ ஓட்டுநர் மோதல்

/

ம.நீ.ம., பெண் நிர்வாகி ஆட்டோ ஓட்டுநர் மோதல்

ம.நீ.ம., பெண் நிர்வாகி ஆட்டோ ஓட்டுநர் மோதல்

ம.நீ.ம., பெண் நிர்வாகி ஆட்டோ ஓட்டுநர் மோதல்


ADDED : ஜூலை 22, 2025 12:44 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, வேறு பாதையில் சென்ற ஆட்டோ ஓட்டுநருடன் ஏற்பட்ட தகராறில், ம.நீ.ம., பெண் நிர்வாகியை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சினேகா மோகன் தாஸ், 35; மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி செயலர். இவர், தி.நகரில் இருந்து மாநில கல்லுாரியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு, நேற்று காலை தோழியுடன் செல்ல இருந்தார். அதற்காக, 'ஆன்லைன்' வாயிலாக, 170 ரூபாய்க்கு 'ஆட்டோ புக்' செய்துள்ளார்.

சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக வந்தபோது, ஆட்டோ ஓட்டுநர் 'கூகுள் மேப்'பை அணைத்து வைத்து, வேறு பாதையில் சென்றுள்ளார். அதிவேகமாகவும் ஆட்டோவை ஓட்டியுள்ளார்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஓட்டுநர் சாந்தோம் சர்ச் அருகே ஆட்டோவை நிறுத்தி உள்ளார். கீழே இறங்கிய ஓட்டுநர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. உடனே, சினேகா மோகன்தாஸ் ஆட்டோ சாவியை எடுக்க முயன்றார். அப்போது ஒருவருக்கு ஒருவர் கைகலப்பாக மாறியது. தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார், தாக்குலில் ஈடுபட்ட ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்த், 35, என்பவரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

காயமடைந்த சினேகா மோகன்தாஸ் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

'கூகுள் மேப்' ஆப் செய்துவிட்டு வேறு பாதையில், ஆட்டோவை அஜாக்கிரதையாக ஓட்டினார். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநரிடம் தட்டிக்கேட்டபோது, 'தான் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்; எனக்கு அனைத்து வழிகளும் தெரியும். மேலும் என் உடைகள் குறித்தும், ஊரு விட்டு ஊரு வந்து பேசுகிறீர்களா எனவும், அவதுாறான வார்த்தைகளால் பேசினார்.

அவரது உரிமத்தை ரத்து செய்வதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us