/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நவீன ரயில்வே சிக்னல் ரூ.135 கோடியில் அனுமதி
/
நவீன ரயில்வே சிக்னல் ரூ.135 கோடியில் அனுமதி
ADDED : செப் 28, 2025 11:30 PM
சென்னை:சென்னை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட 11 ரயில் நிலையங்களில் 'எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங்' என்ற நவீன சிக்னல் முறையை செயல்படுத்த, வாரியம் 135.௬௫ கோடி ரூபாய் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
'எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்' என்பது ரயில்களை வேகமாகவும்பாதுகாப்பாகவும் இயக்க, ரயில்வே கையாளும் இயந்திர தொழில்நுட்ப கட்டமைப்பாகும். இது இயந்திரவியல், மின்னியல் மின்சாரவியல் தொடர்புடையது.
சென்னை கோட்டத்தில், காட்பாடி - ஜோலார்பேட்டை இடையே உள்ள காட்பாடி சந்திப்பு, லத்தேரி, கவனுார், குடியாத்தம், வளத்துார், மேல்பட்டி, பச்சக்குப்பம், ஆம்பூர், வின்னமங்கலம், வாணியம்பாடி, கேட்டாண்டபட்டி ஆகிய 11 ரயில் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் தொழில்நுட்பம் உடைய அதிநவீன சிக்னல் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் ரயில்வே வாரியம், இத்திட்டப்பணிகளுக்கு 135.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நவீன சிக்னல் தொழில்நுட்பம் செயல்படுத்தும்போது, ரயில்களின் வேகம் மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.