sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆர்.எஸ்.எஸ்.,சிற்கு தேசமே முக்கியம் மோகன் பாகவத் பேச்சு

/

ஆர்.எஸ்.எஸ்.,சிற்கு தேசமே முக்கியம் மோகன் பாகவத் பேச்சு

ஆர்.எஸ்.எஸ்.,சிற்கு தேசமே முக்கியம் மோகன் பாகவத் பேச்சு

ஆர்.எஸ்.எஸ்.,சிற்கு தேசமே முக்கியம் மோகன் பாகவத் பேச்சு

2


ADDED : ஜூலை 22, 2024 07:52 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 07:52 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; ''ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிற்கு தேசமே முக்கியம். நம் கலாசாரம், தர்மத்திற்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம், தேசத்தை காக்க ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் முன் வருகின்றனர்,'' என, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்த, ஆர்.எஸ்.எஸ்., குருபூஜை விழாவில், அவர் பேசியதாவது:

ஆர்.எஸ்.எஸ்., சார்பில், 1928 முதல் ஆண்டுதோறும் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் காவிக் கொடிக்கு முன், தங்களால் இயன்றதை அர்ப்பணிக்கின்றனர்.

கடந்த 1928ல், முதல் குருபூஜை விழா நடந்தபோது, தலைமை வகித்த சிறப்பு விருந்தினர், 'அமைப்புக்கு நிதி வசூலிக்க இது சிறந்த ஏற்பாடு' என்றார். குருபூஜை என்பது நிதி வசூலிப்பதற்கான ஏற்பாடு அல்ல; பணம் முக்கியமல்ல. தேசத்திற்காக, தர்மத்திற்காக தங்களால் இயன்றதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

காவி என்பது பாரதிய கலாசாரம், பண்பாடு, தியாகத்தின், தர்மத்தின் அடையாளம். தனிநபர்களிடம் நிறை, குறைகள் இருக்கும். எனவே தான், காவிக் கொடியை, அதாவது சித்தாந்தத்தை குருவாக ஆர்.எஸ்.எஸ்., ஏற்றுள்ளது.

ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ்., தொண்டரும், குரு தட்சணை அளிக்கிறார். அதற்கான ஏற்பாடே குருபூஜை. ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தேசமும், தர்மமும் தான் முக்கியம். நம் கலாசாரம், தர்மத்திற்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம்,தேசத்தை காக்க ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் முன் வருகின்றனர். தேசத்திற்காக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை, ஆர்.எஸ்.எஸ்., ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை உட்பட, 2,000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

மேலும், சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில், நேற்று மாலை, சின்மயா மிஷன் ஏற்பாடு செய்திருந்த இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சியில், மோகன் பாகவத் பங்கேற்றார்; இளைஞர்களிடம், கீதை என்ற தலைப்பில் பேசினார்.






      Dinamalar
      Follow us