/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டாபிராமில் தீக்குளித்து தாய் --- மகள் தற்கொலை
/
பட்டாபிராமில் தீக்குளித்து தாய் --- மகள் தற்கொலை
ADDED : ஜன 11, 2025 12:33 AM
ஆவடி, பட்டாபிராம், வள்ளலார் நகர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் கிரேசி, 42. இவர், மகள் எப்சிபா, 17, உடன், தனியாக வசித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம், வேலுாரில் இருந்து வந்து, மேற்கூறிய வாடகை வீட்டில் வசித்து வந்தார்..
இந்த நிலையில், இவரது வீட்டில் இருந்து, நேற்று நள்ளிரவு 1:30 மணியளவில் கரும்புகை வெளியேறி உள்ளது. அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு பட்டாபிராம் போலீசார் வந்தபோது, கிரேசி மகளுடன் உடலில் கட்டு கம்பியை கட்டிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், 'சகோதரர் மற்றும் தாய், தங்களை சரியாக கவனித்து கொள்ளவில்லை; இதனால் தற்கொலை செய்து கொள்கிறோம்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
போலீசாரின் தொடர் விசாரணையில், கிரேசியின் கணவர் டேவிட், 42, குடும்ப பிரச்னை காரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன் மனைவி, மகளை பிரிந்து, ஆவடி, சேக்காடு பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
கிரேசியின் சகோதரர் ஜான், 47, மற்றும் தாய் ஆகியோர், கிரேசியின் குடும்ப செலவுக்கு, மாதந்தோறும் பணம் கொடுத்து கவனித்து வந்தனர். இந்த நிலையில் தாய், மகள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.