sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தாறுமாறு தடுப்பு கற்களால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

/

தாறுமாறு தடுப்பு கற்களால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

தாறுமாறு தடுப்பு கற்களால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

தாறுமாறு தடுப்பு கற்களால் தடுமாறும் வாகன ஓட்டிகள்


ADDED : டிச 30, 2024 01:37 AM

Google News

ADDED : டிச 30, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி: மணலி விரைவு சாலையில் கன்டெய்னர், டிரெய்லர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும், பைக், ஸ்கூட்டர், ஆட்டோ, கார் போன்ற இலகுரக வாகனங்களும் அனுமதிக்கப்பட்டதால், அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கதையானது.

இதற்கு தீர்வாக, சில ஆண்டுகளுக்கு முன் சாலையை இரண்டாக பிரிக்கும் வகையில், நடுவே கான்கிரீட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு, கன்டெய்னர் லாரிகள் செல்ல தனி வழி ஏற்படுத்தப்பட்டது.

இரவு நேரங்களில் கற்கள் இருப்பது தெரியாததால், சில வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவதாக புகார்கள் எழுந்தது. தொடர்ச்சியாக, தடுப்புக் கற்களுக்கு, ஒளிரும் வகையிலான பெயின்ட் மற்றும் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன.

இந்நிலையில், சாலையின் நடுவே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் கற்கள், கனரக வாகனங்கள் மோதி, ஆங்காங்கே தாறுமாறாக திரும்பியுள்ளது.

இதனால், இரவில் வாகன ஓட்டிகள் தடுமாறி, விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே உயிரிழப்பு ஏற்படும்முன், போக்குவரத்து போலீசார் சுதாரித்து தடுப்புக் கற்களை வரிசையாக அடுக்கி, புது பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us