ADDED : மார் 30, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போரூர், மதுரவாயல், 150வது வார்டு செட்டியார் அகரம் பகுதியில், 62.80 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி வகுப்பறைகள், தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு, நேற்று திறந்து வைத்தார்.
தவிர, உயர் கோபுர மின்விளக்கு செயல்பாடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை வழங்கினார்.
மதுரவாயல் தி.மு.க., - எம்.எல்.ஏ., காரம்பாக்கம் கணபதி, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.