/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மர்பி' கால்பந்து 20 அணிகள் பலப்பரீட்சை
/
'மர்பி' கால்பந்து 20 அணிகள் பலப்பரீட்சை
ADDED : மார் 05, 2024 12:39 AM
சென்னை, சென்னை லயோலா கல்லுாரி சார்பில், கல்லுாரியின் மறைந்த முன்னாள் முதல்வரான எல்.டி.மர்பி நினைவு கோப்பைக்கான கால்பந்து போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி மைதானத்தில் நேற்று காலை துவங்கியது.
இதில், லயோலா, செயின்ட் ஜோசப், எம்.சி.சி., - கேரளாவின் அம்பேத்கர் அரசு கல்லுாரி உட்பட மொத்தம் 20 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று காலை துவங்கிய முதல் போட்டியில், லயோலா பொறியியல் கல்லுாரி மற்றும் ஆசான் கலைக் கல்லுாரி அணிகள் மோதின. இதில், 6 - 0 என்ற கோல் கணக்கில், லயோலா அணி வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில், கேரளாவின் எம்.இ.எஸ்., அஸ்மாபி கல்லுாரி அணி, 7 - 1 என்ற கோல் கணக்கில், சென்னை சர் தியாகராயா கல்லுாரியை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்ந்து, 'நாக் - அவுட்' முறையில், மார்ச் 8ம் தேதி வரை நடக்கின்றன.

