/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வானகரம் மீன் சந்தையில் வாலிபர் மர்ம மரணம்
/
வானகரம் மீன் சந்தையில் வாலிபர் மர்ம மரணம்
ADDED : ஆக 29, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு : வானகரம் மீன் சந்தையில், வாலிபர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரேம், 30. இவர், வானகரம் மீன் அங்காடியின் மாடியில் தங்கி, மீன் விற்பனை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் மாடியில் துாங்கிக் கொண்டிருந்தவர், நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
திருவேற்காடு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.