sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மேற்பார்வையாளர் மர்ம மரணம்

/

மேற்பார்வையாளர் மர்ம மரணம்

மேற்பார்வையாளர் மர்ம மரணம்

மேற்பார்வையாளர் மர்ம மரணம்


ADDED : ஆக 14, 2025 12:24 AM

Google News

ADDED : ஆக 14, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம்: டி.என்.ஜி.ஓ., காலனியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய, மயிலாடுதுறையைச் சேர்ந்த மணி, 35, என்பவர், மூன்று மாதங்களாக இரவுப்பணியில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்து, மது அருந்திவிட்டு படுத்த அவர், காலையில் மூக்கில் நுரை மற்றும் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய ஆதம்பாக்கம் போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

1,100 கிலோ குட்கா பறிமுதல்

ஆவடி: வீராபுரம், அந்தோணி யார் நகரில் சோதனை நடத்திய ஆவடி டேங்க் போலீசார், தகர ஷீட் அறையில், 1,100 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 33, என்பவரை கைது செய்தனர். அவர், பெங்களூரில் இருந்து கன்டெய்னர் லாரியில் குட்கா கடத்தி வந்ததும், அதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய் எனவும், போலீசார் தெரிவித்தனர்.

கடையில் ஊழியர் கைவரிசை

சூளைமேடு: சூளைமேடு காமராஜர் தெருவில் கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்தும் கடை நடத்தி வருபவர் அப்துல் கரீம், 24. கடந்த 4ம் தேதி இரவு, கடையை உடைத்து, மடிக்கணினி மற்றும் 1.50 லட்சம் ரூபாய் திருடப் பட்டிருந்தது. விசாரித்த சூளைமேடு போலீசார், திருட்டில் ஈடுபட்ட கடை ஊழியரான எம்.கே.பி., நகரைச் சேர்ந்த சரத்குமார், 32, என்பவரை கைது செய்து, 1.48 லட்சம் ரூபாய், மடிக்கணினியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us