sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நாகை வாலிபரால் 5 பேருக்கு மறுவாழ்வு

/

நாகை வாலிபரால் 5 பேருக்கு மறுவாழ்வு

நாகை வாலிபரால் 5 பேருக்கு மறுவாழ்வு

நாகை வாலிபரால் 5 பேருக்கு மறுவாழ்வு


ADDED : பிப் 02, 2025 12:44 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,நாகை மாவட்டம், ஒரத்துார் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின், 34. தாம்பரத்தில் உள்ள ஒரு வீட்டில் வண்ணம் பூசும்போது, தவறி கீழே விழுந்தார்.

இதில், தலையில் காயமடைந்த அவரை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஸ்டாலினுக்கு, நேற்று முன்தினம் மூளைச்சாவு ஏற்பட்டது.

அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க, குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி, கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள் தானமாக பெறப்பட்டன.

இதில், ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டு கண்களும், எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதன் வாயிலாக, ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றனர்.

உறுப்பு தானம் அளித்த வாலிபரின் உடலுக்கு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தலைமையிலான டாக்டர்கள், அரசு மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us