ADDED : அக் 01, 2024 12:07 AM

தேசிய பால் பேட்மின்டன்
தமிழக அணி 'சாம்பியன்'
திருவொற்றியூர்,
இந்திய தேசிய பூப்பந்தாட்ட இணையம் சார்பில், 43வது தேசிய சப் - ஜூனியர் பால் பேட்மின்டன் போட்டி, ஹரியானா மாநிலத்தில் கடந்த 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. இதில், 15 வயதிற்குட்பட்ட சிறுவர் - சிறுமியர் பிரிவில் 56 அணிகள் பங்கேற்றன.
இதில், தமிழக அணி ஐந்து பிரிவுகளில் பங்கேற்றது. சிறுமியர் இரட்டையர் பிரிவில், தமிழக அணி, 35 - 30 என்ற புள்ளிக்கணக்கில் ராஜஸ்தானையும், சிறுவர் இரட்டையர் பிரிவில், கேரள அணியை, 35 - 32 என்ற புள்ளிக்கணக்கிலும் தமிழகம் வென்றது.
ஐவர் சிறுமியர் பிரிவில், ஆந்திர மாநில அணியை, 35 - 22, 35 - 19 என்ற புள்ளிக்கணக்கிலும், ஐவர் சிறுவர் பிரிவில், 35 - 30, 31 - 35, 35 - 28 என்ற புள்ளிக்கணக்கில் ஆந்திர அணியை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.
மொத்தமுள்ள ஐந்து பிரிவுகளில், நான்கு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது.