sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 தேசிய கேரம் சாம்பியன்ஷிப் சென்னை வீரர்கள் அசத்தல்

/

 தேசிய கேரம் சாம்பியன்ஷிப் சென்னை வீரர்கள் அசத்தல்

 தேசிய கேரம் சாம்பியன்ஷிப் சென்னை வீரர்கள் அசத்தல்

 தேசிய கேரம் சாம்பியன்ஷிப் சென்னை வீரர்கள் அசத்தல்


ADDED : நவ 14, 2025 03:04 AM

Google News

ADDED : நவ 14, 2025 03:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ம.பி., மாநிலத்தில் நடந்த தேசிய கேரம் போட்டியின் ஒற்றையர் பிரிவில், தமிழகத்தின் பவன்குமார், நவீத் அகமது, தெனினா ஆகியோர், முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர்.

அகில இந்திய கேரம் சங்கம் மற்றும் மத்திய பிரதேச கேரம் சங்கம் இணைந்து நடத்திய, தேசிய அளவில் இருபாலருக்குமான 50வது கேரம் சாம்பியன்ஷிப் போட்டி, ம.பி., மாநிலத்தின் குவாலியரில் நடந்தது.

இதில் தமிழகம் உட்பட 20 மாநில அணிகள் பங்கேற்றன. போட்டி 'லீக் கம் நாக் - அவுட்' முறையில், ஒற்றையர் மற்றும் குழு பிரிவுகளில் நடந்தது.

தமிழகம் சார்பாக போட்டியிட்ட, தேசிய தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சென்னையின் தெனினா, 15, பவன்குமார், 17, இரண்டாவது இடத்தில் இருக்கும் நவீத் அகமது, 17, ஆகியோர், ஒற்றையர் பிரிவில் போட்டியிட்டனர்.

இதன் ஆண்களுக்கான இறுதி போட்டியில் நவீத் அகமது, பவன்குமார் மோதினர். இதில் பவன்குமார் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் தெனினா வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார்.






      Dinamalar
      Follow us