sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'பார்க்கிங்'கான நியூ ஆவடி சாலை போக்குவரத்து நெரிசலால் அவதி

/

'பார்க்கிங்'கான நியூ ஆவடி சாலை போக்குவரத்து நெரிசலால் அவதி

'பார்க்கிங்'கான நியூ ஆவடி சாலை போக்குவரத்து நெரிசலால் அவதி

'பார்க்கிங்'கான நியூ ஆவடி சாலை போக்குவரத்து நெரிசலால் அவதி


ADDED : செப் 26, 2024 12:29 AM

Google News

ADDED : செப் 26, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், நியூ ஆவடி சாலையோரத்தில் அத்துமீறி நிறுத்தப்படும் குடிநீர் லாரிகள், தனியார் டிராவல்ஸ் வாகனங்களால், நாளுக்கு நாள் சாலை சுருங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

நியூ ஆவடி சாலையில், வில்லிவாக்கத்தில் இருந்து ஐ.சி.எப்., மற்றும் கீழ்ப்பாக்கத்தை நோக்கி செல்லும் சாலை, அயனாவரம் காவல் எல்லைக்கு உட்பட்டது.

அதேபோல், கீழ்ப்பாக்கத்தில் இருந்து வில்லிவாக்கத்தை நோக்கி செல்லும் சாலை, அண்ணா நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட சாலை.

இதில், அண்ணா நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட நியூ ஆவடி சாலையில், அத்துமீறி 10க்கும் மேற்பட்ட டிராவல்ஸ் வாகனங்கள் படையெடுத்து நிறுத்தப்படுகின்றன. அயனாவரம் எல்லைக்கு உட்பட்ட சாலையோரத்தில், குடிநீர் லாரிகள் உட்பட கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதற்கு, இரு எல்லை போக்குவரத்து போலீசாரும் ஆதரவாக இருப்பதால், சாலை மேலும் சுருங்கி, அப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இரு எல்லை போக்குவரத்து போலீசாரின் அலட்சியப் போக்கால், நியூ ஆவடி சாலையில் தினமும் விபத்து ஏற்படுகிறது.

விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, அபராதம் விதிக்க போக்குவரத்து இணை கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us