ADDED : ஆக 23, 2025 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், மாங்காடு காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, மவுலிவாக்கத்தில் புதிய காவல் நிலையம் நேற்று துவக்கப்பட்டது.
ஆவடி காவல் ஆணையரகம் கட்டுப்பாட்டில் உள்ள மாங்காடு காவல் நிலையத்தின் எல்லை பரப்பு பெரியதாக இருந்தது.
காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் நேரில் புகார் அளிக்கவும், குற்ற பகுதிகளுக்கு போலீசார் செல்லவும் தாமதம் ஏற்பட்டது.
இதனால், மாங்காடு காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, முகலிவாக்கம் பிரதான சாலை மதனந்தபுரத்தில், தற்காலிக கட்டடத்தில் மவுலிவாக்கம் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.