sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கட்டட அனுமதி விண்ணப்பம் ஏப்.,1 முதல் புதிய நடைமுறை

/

கட்டட அனுமதி விண்ணப்பம் ஏப்.,1 முதல் புதிய நடைமுறை

கட்டட அனுமதி விண்ணப்பம் ஏப்.,1 முதல் புதிய நடைமுறை

கட்டட அனுமதி விண்ணப்பம் ஏப்.,1 முதல் புதிய நடைமுறை


ADDED : மார் 25, 2025 12:07 AM

Google News

ADDED : மார் 25, 2025 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை மாநகராட்சியில் கட்டட திட்ட அனுமதி பெற, திட்ட மதிப்பிற்கு ஏற்ப, பல லட்சம் ரூபாய் கமிஷன் பெறப்படுவதாகவும், அதற்கு உடன்படாதவர்களின் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுவதாவும், தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.

இவற்றை தடுக்கும் வகையில், மாநகராட்சிக்கு பதிலாக, தமிழக அரசின் ஒற்றை சாளர போர்ட்டல் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை மாநகராட்சியில், ஆன்லைன் திட்ட அனுமதி பணிகள், கட்டட திட்ட ஒப்புதல் அமைப்பு வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சேவையை மேம்படுத்த, தமிழக அரசின் ஒற்றைச் சாளர போர்ட்டலில் ஒருங்கிணைக்கப்படுகிறது.

எனவே, ஏப்., 1 முதல், மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்படும் கட்டட திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்கள், onlineppa.tn.gov.in என்ற, தமிழக அரசின் ஒற்றை சாளர போர்ட்டல் இணையதளத்தில் தான் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், மார்ச் 31, அதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும், ஏற்கனவே உள்ள நடைமுறைப்படியே ஒப்புதல் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***






      Dinamalar
      Follow us