/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செய்திகள் சில வரிகளில்... ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
/
செய்திகள் சில வரிகளில்... ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
செய்திகள் சில வரிகளில்... ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
செய்திகள் சில வரிகளில்... ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
ADDED : செப் 16, 2025 01:20 AM
ஆவடி: பட்டாபிராம் - நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே, 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
மெரினாவில்
ஆண் சடலம் மீட்பு
சென்னை: மெரினா கலங்கரை விளக்கம் அருகே, நேற்று முன்தினம் இரவு, 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. மெரினா போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்; எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
போதை பொருள்
விற்றவர் சிக்கினார்
அரும்பாக்கம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பேத்கர் மைதானம் அருகே போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், 29, என்பவரை, போலீசார் கைது செய்தனர். அவரது பையை சோதனை செய்ததில் 2.75 கிராம் 'மெத் ஆம் பெட்டமைன்' போதைப் பொருள் சிக்கியது.