sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : செப் 16, 2025 01:14 AM

Google News

ADDED : செப் 16, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

10 கிலோ கஞ்சா

செங்குன்றத்தில்

பறிமுதல்

செங்குன்றம்: செங்குன்றம், மொண்டியம்மன் நகர் சோதனைச் சாவடி அருகே கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்தர், 38, என்பவரை, செங்குன்றம் மது விலக்கு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவர், ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த 10.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சைக்கிள்

திருடன்

சிக்கினான்

புளியந்தோப்பு: புளியந்தோப்பு பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 41. நேற்று முன்தினம் இவரது மகனின் சைக்கிள் திருட்டு போனது.

இது குறித்து விசாரித்த போலீசார், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, 36, என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மூன்று சைக்கிள் மீட்கப்பட்டது.

பஸ் மோதி

இளம்பெண்

காயம்

வண்ணாரப்பேட்டை: வியாசர் பாடி, எம்.பி.எம்., தெருவைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தன் தாய் திலககுமாரியுடன், 55, சுசூகி ஆக்சஸ் ஸ்கூட்டரில், நேற்று வியாசர்பாடியில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி சென்றார்.

வண்ணாரப்பேட்டை, நாராயணப்ப பள்ளி அருகே வந்தபோது முன்னால் சென்ற பேருந்தில், எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மோதியது.

இதில் தாய் மற்றும் மகள் கீழே விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பினர்.






      Dinamalar
      Follow us