ADDED : அக் 30, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலியல் தொழில்
நடத்தியவர் கைது
சென்னை: விருகம்பாக்கம், தாராசந்த் நகர் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக, விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் விசாரணையில், வளசரவாக்கத்தைச் சேர்ந்த நரேஷ்குமார், 41, என்பவர் வீட்டை வாடகைக்கு எடுத்து, பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த, 3 பெண்களை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

