sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வடமாநில வாலிபர் கொலை? கழுத்தில் கயிறுடன் உடல் மீட்பு

/

வடமாநில வாலிபர் கொலை? கழுத்தில் கயிறுடன் உடல் மீட்பு

வடமாநில வாலிபர் கொலை? கழுத்தில் கயிறுடன் உடல் மீட்பு

வடமாநில வாலிபர் கொலை? கழுத்தில் கயிறுடன் உடல் மீட்பு


ADDED : நவ 06, 2025 03:42 AM

Google News

ADDED : நவ 06, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெ.ஜெ.நகர்: கழுத்தில் கயிறுடன் வடமாநில வாலிபர் உடல் மீட்கப்பட்டதால், கொலை- செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீஜூல், 31. இவர், முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகரில் கட்டடப்பணி நடக்கும் இடத்தில் தங்கி, பணி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் பணிக்கு செல்லாமல், தன் அறையில் இருந்துள்ளார்.

இரவு பணி முடிந்து அறைக்கு திரும்பிய சக பணியாளர்கள், பிஜூல் கழுத்தில் கயிறுடன், தரையில் சுயநினைவின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்கு பதிந்து, கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் அவர் இறந்ததால், கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us