sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இடையூறாக மாறிய சென்டர் மீடியன்: மீண்டும் பழையபடி மாற்ற கோரிக்கை

/

இடையூறாக மாறிய சென்டர் மீடியன்: மீண்டும் பழையபடி மாற்ற கோரிக்கை

இடையூறாக மாறிய சென்டர் மீடியன்: மீண்டும் பழையபடி மாற்ற கோரிக்கை

இடையூறாக மாறிய சென்டர் மீடியன்: மீண்டும் பழையபடி மாற்ற கோரிக்கை


ADDED : நவ 06, 2024 12:24 AM

Google News

ADDED : நவ 06, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பொதுமக்களுக்கு இடையூறாக அமைத்துள்ள சென்டர் மீடியனை அகற்றி, பழையபடி வழி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

அண்ணா நகர், சாந்தி காலனி, நடுவாங்கரை பகுதிகளில் வசிப்பவர்கள், நடுவாங்கரை கூவம் அருகில் செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்து, எதிர்புறத்தில் உள்ள பாஞ்சாலியம்மான் கோவில் வழியாக, கோயம்பேட்டை நோக்கிச் செல்வர்.

சில மாதங்களுக்கு முன், அவ்வாறு கடக்கும் சாலையின் வழியை தடுத்து, போலீசார் 'சென்டர் மீடியன்' அமைத்தனர். இதனால், இப்பகுதியில் வசிக்கும் மக்கள், 1 கி.மீ., சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.

அதேபோல், அதே பகுதியான திருவீதியம்மன் கோவில் அருகில், மக்களுக்கு இடையூறாக தடுப்பு அமைத்து, பாதை திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியில் வசிப்போர் கூறியதாவது:

அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், திருவீதியம்மன் கோவில் மற்றும் நடுவாங்கரை பகுதியில், இருபுறங்களிலும் திரும்பும் வகையில் வழி இருந்தது.

தற்போது, இங்கு பொதுமக்களுக்கு இடையூறாக, சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், நடுவாங்கரையில் இருந்து வரும் வாகனங்கள், அண்ணா நகர் ஆர்ச் வரை, 1.5 கி.மீ., சென்று 'யு- - டர்ன்' செய்ய வேண்டிய நிலை உள்ளது.

தடுப்பு அமைத்துள்ள சாலையில், விதிமீறி சிலர் எதிர் திசையில் வந்து, அரும்பாக்கம் வழியில் செல்வதால், விபத்து ஏற்படுகிறது.

அதேபோல், அரும்பாக்கம் திருவீதியம்மன் கோவில் அருகில் இருந்த 'யு -- டர்ன்' அடைக்கப்பட்டதால், கோயம்பேடு மேம்பாலம் வழியாக ரோகிணி திரையரங்கம் வரை, 2.5 கி.மீ., சென்று திரும்ப வேண்டி உள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து போலீசாரிடம் கேட்டால், நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

இதனால் இப்பகுதியில் வசிப்போர் காலை, மாலை நேரங்களில் கடும் அவதியடைகின்றனர்.

இதுதொடர்பாக, நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர், அமைந்தகரை போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்துள்ளோம்.

பொதுமக்களின் நலன் கருதி, இரு சந்திப்பிலும் தடுப்புகளை அகற்றி, பழையபடி சாலையை கடக்கும் வசதி செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us