ADDED : செப் 19, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர், சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் ரவி, 62. சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு கிராமத்தில் வசிக்கு மகன் வீட்டில் இருந்து அசோக் நகருக்கு, நேற்று மாலை புறப்பட்டார்.
சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலைய தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சென்னை கடற்கரையில் இருந்து, திருமால்பூர் சென்ற புறநகர் மின்சார ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், முதியவர் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.