ADDED : பிப் 18, 2024 12:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார், அம்பத்துார், விஜயலட்சுமிபுரம், கே.வி.கே.சாமி தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், 67. இவர், அதே பகுதியில், அச்சகம் நடத்தி வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, அம்பத்துார் மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு செல்ல, அங்குள்ள ரயில் பாதையை கடந்துள்ளார்.
அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் சென்ற, 'சதாப்தி' விரைவு ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.