ADDED : அக் 26, 2024 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொருக்குப்பேட்டை:கொருக்குப்பேட்டை தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடப்பதாக, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு நேற்று மாலை தகவல் வந்தது.
கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பெரம்பூரில் இருந்து கொருக்குப்பேட்டை நோக்கி வந்த கூட்ஸ் ரயில் மோதி தலை துண்டாகி உயிரிழந்தது தெரியவந்தது. இறந்தவர் குறித்த போலீசார் விசாரிக்கின்றனர்.