ADDED : ஏப் 17, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர், அண்ணா நகர், நடுவங்கரை பகுதியில், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பதாக, அண்ணா நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, போலீசார் சம்பவ இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்த போது, ஒரு நம்பர் லாட்டரி விற்பவர் என்பது தெரியவந்தது.
காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது, அம்பத்துார், கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த திவாகர், 30, என்பது தெரிந்தது.
அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், நேற்று அதிகாலை சிறையில் அடைத்தனர்.

