ADDED : நவ 13, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி: லாரி மீது பைக் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தா்.
பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம், வெற்றிலை தோட்டம், ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் அஜித், 30; லாரி ஓட்டுநர். நேற்று மாலை, இருசக்கர வாகனத்தில் சென்னீர் குப்பத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்றார்.
ஆவடி-, கரையான் சாவடி சாலை, சென்னீர்குப்பம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் மீது மோதி, நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில், லாரி டயர் ஏ றி, இறங்கியதில் அஜித் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, நிற்காமல் சென்ற லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

