sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க.,வால் மட்டுமே முடியும்: கும்மிடிப்பூண்டி கூட்டத்தில் பழனிசாமி உறுதி

/

 தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க.,வால் மட்டுமே முடியும்: கும்மிடிப்பூண்டி கூட்டத்தில் பழனிசாமி உறுதி

 தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க.,வால் மட்டுமே முடியும்: கும்மிடிப்பூண்டி கூட்டத்தில் பழனிசாமி உறுதி

 தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க.,வால் மட்டுமே முடியும்: கும்மிடிப்பூண்டி கூட்டத்தில் பழனிசாமி உறுதி


ADDED : டிச 31, 2025 05:15 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தீயசக்தி தி.மு.க.,வை வீழ்த்த, 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க.,வால் மட்டுமே முடியும்,'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.

'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று, கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கவரைப்பேட்டையில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. அதில், பழனிசாமி பேசியதாவது:

குடும்ப கட்சிதான் தமிழகத்தை ஆள்கிறது. ஆட்சி, அதிகாரம் அனைத்தும் அந்த குடும்பத்திற்குதான். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் கட்சி தலைமைக்கும், ஆட்சி தலைமைக்கும் வர முடியும்.

பார்லிமென்ட் தி.மு.க., குழு தலைவராக இருந்த டி.ஆர்.பாலுவை நீக்கி விட்டு, ஸ்டாலினின் தங்கை கனிமொழியை நியமித்துள்ளனர். ஆனால், அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டன், கட்சியின் பொதுச்செயலராக, முதல்வராக வர முடியும்.

தி.மு.க., என்பது கட்சி அல்ல; 'கார்ப்பரேட்' நிறுவனம். ஆட்சிக்கு வந்து, 56 மாதங்களில் 8 கோடி மக்களை சுரண்டி, ஒரு குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல், சுரண்டலுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவங்கியபோது, 'தி.மு.க.,வை தீயசக்தி' என்றார். அந்த தீயசக்தி தி.மு.க.,வை, இன்று வரை வீழ்த்தி வருகிறது. இப்போது புதிது புதிதாக வந்து, ஏதேதோ பேசுகின்றனர்.

எதிரிகளை வீழ்த்தும் பலமுள்ள கட்சி அ.தி.மு.க., மட்டுமே. அ.தி.மு.க., நேற்று துவங்கிய கட்சி அல்ல; பொன் விழா கண்ட கட்சி; 31 ஆண்டுகள் ஆண்ட கட்சி; தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணமான கட்சி. வரும் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளில், 95 சதவீதத்தை நிறைவேற்றினோம். அ.தி.மு.க., பற்றி பேச எதுவும் இல்லை என்பதால், கூட்டணி கட்சியான பா.ஜ.,வை மதவாத கட்சி என்று, முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கிறார். கடந்த 1999 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வோடு தி.மு.க., கூட்டணி அமைத்தது. வாஜ்பாய் அமைச்சரவையில், அங்கம் வகித்தது.

கடந்த 2001 சட்டசபை தேர்தலில், தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் வி.சி.,யும் இருந்தது. அப்போது, பா.ஜ., நல்ல கட்சி. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தால் மட்டும் மதவாத கட்சியா?

அ.தி.மு.க.,வை விமர்சிக்கும் முன், வரலாற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இனி பச்சோந்தி போல நிறம் மாற முடியாது. தி.மு.க.,வை வீழ்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்.

தி.மு.க., என்ற இன்ஜின் இல்லாத காரை, 10 ஆண்டுகளாக கூட்டணி என்கிற லாரி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இப்போது, இந்த லாரி 'மக்கர்' செய்கிறது.

ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்., - வி.சி., கேட்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை என, கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் செயலர் சண்முகம் கூறுகிறார். தி.மு.க., கூட்டணிக்குள் புகைச்சல் கிளம்பி விட்டது.

இந்த கூட்டணி நிலைக்குமா என்ற, சந்தேகம் மக்களுக்கு வந்து விட்டது. தி.மு.க., கூட்டணி நிலைக்காது என்பதற்கு, இதுவே சான்று.

அரசு நலத்திட்டங்களின் தாக்கம் குறித்து, மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக ஆய்வு செய்ய, 43 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். ஆட்சிக்கு வர முடியாது என முடிவு செய்து, மக்கள் பணத்தை அபகரிக்க முடிவு செய்து விட்டனர்.

அ.தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்று, 100 நாள் வேலை திட்ட நாட்களை, 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தில் மாநில அரசுக்கான அதிகாரமும் பறிக்கப்படவில்லை.

ஆனாலும், சட்டசபை தேர்தல் வருவதால், தவறான தகவல்களை பரப்பி ஆதாயம் தேட, தி.மு.க., முயற்சிக்கிறது. இப்போது, தமிழகம் போராட்ட களமாக மாறிவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us