sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடை ஒப்படைக்க தாமதமானதால் ரூ.1.47 கோடியை திருப்பி தர உத்தரவு

/

கடை ஒப்படைக்க தாமதமானதால் ரூ.1.47 கோடியை திருப்பி தர உத்தரவு

கடை ஒப்படைக்க தாமதமானதால் ரூ.1.47 கோடியை திருப்பி தர உத்தரவு

கடை ஒப்படைக்க தாமதமானதால் ரூ.1.47 கோடியை திருப்பி தர உத்தரவு


ADDED : செப் 29, 2025 12:39 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வண்டலுாரில், உரிய காலத்தில் கடையை ஒப்படைக்காத நிறுவனம், அதற்காக வசூலித்த 1.47 கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வண்டலுாரில், 'மெட்ரோ லைன் புரோமோட்டர்ஸ்' நிறுவனம், வணிக வளாகம் கட்டி வருகிறது. இதில் கடை ஒதுக்கீடு பெற, ஏ.செல்வராஜ் அருணாச்சலம், பெருமாள் ஆகியோர் பணம் செலுத்தினர்.

கடந்த, 2010ல் அவர்கள் ஒப்பந்தம் செய்து, அதற்காக 1.47 கோடி ரூபாயை செலுத்தினர். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் அந்நிறுவனம், கடைகளை ஒப்படைக்கவில்லை.

இது குறித்து பணம் செலுத்தியவர்கள், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர்கள், சுப்ரமணியன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், கட்டுமான நிறுவனம் கடையை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது.

எனவே, மனுதாரர்கள் செலுத்திய 1.47 கோடி ரூபாயை கட்டுமான நிறுவனம் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். இத்தொகைக்கு, ஆண்டுக்கு, 10.85 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டியை கணக்கிட்டு, 30 நாட்களுக்குள் கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us