/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்பு தானம்
/
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்பு தானம்
ADDED : ஜன 24, 2025 12:27 AM
சென்னை,
சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த துாத்துக்குடி மாவட்டம், மேலூரைச் சேர்ந்த 48, வயது நபர் ஒருவர், பணியின் போது கால்தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமுற்றார்.
அவசர சிகிச்சைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர், நேற்று முன்தினம், மூளைச்சாவு அடைந்தார். உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர்.
அதன்படி, சிறுநீரகங்கள், கல்லீரல், விழி வெண்படலம், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டன. இதில், ஒரு சிறுநீரகம், கல்லீரல், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநோயாளிக்கு தானமாக வழங்கப்பட்டது.
மற்றொரு சிறுநீரகம், கீழ்பாக்கம் மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. தோல்- விழி வெண்படலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உறுப்பு சேமிப்பு வங்கியில் வைக்கப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானமளித்தவரின் உடலுக்கு, ராயபுரம் எம்.எல்.ஏ., மூர்த்தி, மருத்துவமனை முதல்வர் பாலாஜி, நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

