sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'தத்கால்' பெற 5 ரயில்களில் ஓ.டி.பி., முறை அமல்

/

 'தத்கால்' பெற 5 ரயில்களில் ஓ.டி.பி., முறை அமல்

 'தத்கால்' பெற 5 ரயில்களில் ஓ.டி.பி., முறை அமல்

 'தத்கால்' பெற 5 ரயில்களில் ஓ.டி.பி., முறை அமல்


ADDED : டிச 25, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தெற்கு ரயில்வேயில், ஐந்து விரைவு ரயில்களில், ஓ.டி.பி., எண் கொடுத்து, தத்கால் டிக்கெட் பெறும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

ரயில்கள் புறப்படும் முந்தைய நாள் காலை, தத்கால் முறையில் டிக்கெட் பெறலாம். இதன்படி, இந்திய உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தத்கால் டிக்கெட் பெறும் பயணியர், ஆதார் எண்ணில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போனுக்கு வரும் ஓ.டி.பி., எண்ணை உறுதி செய்தபின், டிக்கெட் பெறும் முறை, ரயில்வேயில் அறிமுகமாகி உள்ளது. இந்த நடைமுறை, ரயில்வே மண்டலங்களில் படிப்படியாக அமலாகி வருகிறது.

தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் - குஜராத் மாநிலம் ஆமதாபாத், சென்னை - மேற்கு வங்க மாநிலம் ஹவுரா, கேரள மாநிலம் ஆலப்புழா - ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத், எழும்பூர் - மும்பை சி.எஸ்.எம்.டி., சென்னை சென்ட்ரல் - மும்பை சி.எஸ்.எம்.டி., ஆகிய ஐந்து விரைவு ரயில்களிலும் இனி, ஓ.டி.பி., எண்ணை உறுதி செய்த பிறகே, தத்கால் பெற முடியும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us