ADDED : டிச 20, 2025 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர்: கொடுங்கையூரில், நாய் கடித்து பெயின்டர் பலியானார்.
கொடுங்கையூர், கொய்யாதோப்பு 7வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அருள், 48; பெயின்டர். திருமணமாகாத இவர், தாய் முத்துலட்சுமியுடன் வசித்து வந்தார்.
கடந்த 8ம் தேதி என்.எஸ்.கே., சாலையில் சென்றபோது, தெரு நாய் ஒன்று அவரை கடித்துள்ளது.
இதற்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
நாய் கடித்த பின்பு மது அருந்தியிருக்கலாம் எனவும், அதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு, அவர் உயிரிழந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

