/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரண்டு உயிரை காவு வாங்கிய பள்ளிக்கரணை சாலை சந்திப்பு
/
இரண்டு உயிரை காவு வாங்கிய பள்ளிக்கரணை சாலை சந்திப்பு
இரண்டு உயிரை காவு வாங்கிய பள்ளிக்கரணை சாலை சந்திப்பு
இரண்டு உயிரை காவு வாங்கிய பள்ளிக்கரணை சாலை சந்திப்பு
ADDED : ஏப் 27, 2025 03:03 AM
பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை, கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் அன்பழகன், 56; ஜல்லடியன்பேட்டையில் ஒரு துணிக்கடை ஊழியர்.
நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் வாகனத்தில், வேளச்சேரி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.
பள்ளிக்கரணை, துலுக்கானத்தம்மன் கோவில் அருகே உள்ள சாலை சந்திப்பில் திரும்பும்போது பின்னால் வந்த டாரஸ் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அன்பழகன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான விழுப்புரத்தைச் சேர்ந்த மணிவண்ணன், 30, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இதே பள்ளிக்கரணை துலுக்கானத்தம்மன சாலை சந்திப்பில், கண்டிகையைச் சேர்ந்த பெருமாள், 74, என்பவர், கடந்த 14ம் தேதி சாலையை கடக்கும்போது, 'ஸ்கார்பியோ' கார் மோதி படுகாயமடைந்தார்.
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த இவர், நேற்று முன்தினம் காலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.