sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குவைத் - சென்னை விமானத்தில் சிகரெட் புகைத்து பயணி ரகளை

/

குவைத் - சென்னை விமானத்தில் சிகரெட் புகைத்து பயணி ரகளை

குவைத் - சென்னை விமானத்தில் சிகரெட் புகைத்து பயணி ரகளை

குவைத் - சென்னை விமானத்தில் சிகரெட் புகைத்து பயணி ரகளை


ADDED : ஆக 19, 2025 12:35 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில், சிகரெட் புகைத்து ரகளையில் ஈடுபட்ட பயணி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

குவைத்தில் இருந்து சென்னைக்கு 'இண்டிகோ' விமானம், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இதில், 150 பேர் இருந்தனர்.

இந்த விமானத்தில், தமிழகத்தைச் சேர்ந்த சேக் முகமது, 28, என்பவர் பயணித்தார். இவர், தன் இருக்கையில் இருந்து அடிக்கடி எழுந்து, விமானத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், விமானத்தில் சேக் முகமது சிகரெட் புகைப்பது தெரிய வந்தது. இது குறித்து விமான பணிப்பெண்கள் அவரிடம் எச்சரித்துள்ளனர். இதற்கு, சேக் முகமது அவர்களிடம் தகராறு செய்து, ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் தெரிவித்தார். விமானம் தரை இறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள், அவரிடம் குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனைகளை நடத்தி முடித்தனர். பின் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us