sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பரங்கிமலையில் நகரும் படிக்கட்டு இயங்காததால் பயணியர் தவிப்பு

/

பரங்கிமலையில் நகரும் படிக்கட்டு இயங்காததால் பயணியர் தவிப்பு

பரங்கிமலையில் நகரும் படிக்கட்டு இயங்காததால் பயணியர் தவிப்பு

பரங்கிமலையில் நகரும் படிக்கட்டு இயங்காததால் பயணியர் தவிப்பு


ADDED : ஜன 03, 2024 12:31 AM

Google News

ADDED : ஜன 03, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிமலை, பரங்கிமலை ரயில் நிலையத்தை, தினம் ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.

அங்கிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, கிண்டி, பாரிமுனை, ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, மின்சார ரயிலில் பயணித்து பணி, கல்லுாரி, பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

தவிர, கணிசமான பயணியர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி திரிசூலம், கோயம்பேடு, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

மக்கள் பயன்பாடு அதிகம் உள்ளதால், பரங்கிமலை ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

பரங்கிமலை ரயில் நிலைய முன்பதிவு மையத்தில் இருந்து நடைபாதைகளுக்கு மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் செல்ல வசதியாக, 'எஸ்கலேட்டர்' எனும் நகரும் படிகட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதை காலை, மாலை வேளைகளில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியர், குழந்தைகளுடன் வரும் பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், அந்த நகரும் படிகட்டுகளை முறையாக பராமரிக்காததால், அடிக்கடி பழுதடைந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. பல நாட்களாக, மாலை நேரத்தில் அதன் இயக்கம் நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது.

சம்பந்தப்பட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, நகரும் படிக்கட்டு முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us