/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஏர் இந்தியா' விமானங்கள் தாமதத்தால் பயணியர் அவதி
/
'ஏர் இந்தியா' விமானங்கள் தாமதத்தால் பயணியர் அவதி
ADDED : செப் 14, 2025 03:11 AM
சென்னை:'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விமானங்கள், தாமதமாக இயக்கப்பட்டதால் பயணியர் அவதியடைந்தனர்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12:35 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட வேண்டிய 'ஏர் இந்தியா' விமானம், ஒன்றரை மணி நேரம் தாமதமாக அதிகாலை 2:05 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதேபோல, இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12:55 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம், அதிகாலை 2:25 மணிக்கு புறப்பட்டது.
மேலும், நேற்று முன்தினம் இரவு 10:10 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண் டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக, நள்ளிரவு 12:40 மணிக்கு புறப்பட்டு சென்றது.
அதுமட்டுமல்லாமல், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு காலை 5:40 மணிக்கு புறப்படும் விமானம், மூன்று மணி நேரம் தாமதமாக, காலை 8:40 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணியர் அவதியடைந்தனர்.
விமானங்களின் தாமதம் குறித்து, பயணியருக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பயணியர் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.