sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விமான நிலைய பயணியர் பாதுகாப்பிற்கு ரோந்து வாகனம்

/

விமான நிலைய பயணியர் பாதுகாப்பிற்கு ரோந்து வாகனம்

விமான நிலைய பயணியர் பாதுகாப்பிற்கு ரோந்து வாகனம்

விமான நிலைய பயணியர் பாதுகாப்பிற்கு ரோந்து வாகனம்


ADDED : மார் 15, 2024 12:17 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணியர் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக, விமான நிலைய காவல் ரோந்து வாகன திட்டத்தை, கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோட், நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது, கமிஷனர் கூறியதாவது:

விமான நிலையத்திற்கு வரும் பயணியர், உடன் வருவோரின் உடைமைகளை பாதுகாக்கும் விதமாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தில், 10 பயிற்சி பெற்ற காவலர்கள் உள்ளனர்.

2 பிரத்யேக ரோந்து வாகனம், 1 பேட்டரி வாகனம் மற்றும் நவீன சாதனங்களுடன், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவர்.

முதியோர், வெளிநாட்டினருக்கு தேவைப்படும் விபரங்களை வழங்கவும், உதவிகள் செய்யவும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர்.

இதனால், குற்றங்கள் நிகழாமல் தடுக்கப்படுவதுடன், பயணியரின் உடைமைகள் பாதுகாக்கப்படும்.

மேலும், புதிதாக வரும் பயணியருக்கு டாக்சி வாகன உதவி, அவசர உதவி குறித்து தெரிவிக்கப்படும்.

இதனால், மோசடி நபர்களிடம் இருந்து பயணியர் பாதுகாக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us