ADDED : அக் 29, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், பாடியநல்லுார், பல்லவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜி.சூர்யா, 27. இவர், பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை 5:00 மணியளவில், ரயிலில் பெங்களூரில் இருந்து பெரம்பூர் வந்தவர், வீட்டுக்கு செல்ல படேல் சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, 'ேஹாண்டா டியோ' ஸ்கூட்டரில் வந்த மூவர், சூர்யா கையில் வைத்திருந்த 50,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து, சிட்டாக பறந்தனர்.
இது குறித்து, செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல் பெரம்பூர் பகுதியில் இரண்டு முறை மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதிலும், இதே டியோ ஸ்கூட்டரில் வந்த நபர்களே கைவரிசை காட்டி சென்றுள்ளனர்.

