sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பள்ளிக்கரணை ஏரி கரையில்  500 பனை விதைகள் நடவு

/

பள்ளிக்கரணை ஏரி கரையில்  500 பனை விதைகள் நடவு

பள்ளிக்கரணை ஏரி கரையில்  500 பனை விதைகள் நடவு

பள்ளிக்கரணை ஏரி கரையில்  500 பனை விதைகள் நடவு


ADDED : நவ 18, 2024 02:49 AM

Google News

ADDED : நவ 18, 2024 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்கரணை:பல்வேறு நலச் சங்கத்தினர் சார்பில், பள்ளிக்கரணை அணை ஏரியைச் சுற்றிலும், 500 பனை விதைகள் நேற்று நடவு செய்யப்பட்டன.

நீர் பிடிப்பு பகுதியில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும், பனை மரங்கள் அளப்பரிய பங்களிப்பு செய்கின்றன. எனவே, பனை மரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, தமிழகம் முழுக்க தன்னார்வலர்கள் பனை மர விதைகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பள்ளிக்கரணை பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்பு நலச் சங்கங்களை சேர்ந்தோர், அப்பகுதியில் உள்ள அணை ஏரியில், 500 பனை விதைகளை நேற்று நடவு செய்தனர்.

குடியிருப்போர் சங்க நிர்வாகி முருகன் கூறியதாவது:

'அணை ஏரி கரையோரம் பனை விதைகளை நடவு செய்யுங்கள்' என, சென்னை ஐ.ஐ.டி., சார்பில், 500 பனை விதைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து, இப் பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்பு சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து, நேற்று காலை முதல் மாலை வரை, 500 விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர். தவிர, பள்ளம் தோண்டும் பணிக்காக, ஐந்து ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us