/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பிளாஸ்டிக்' இல்லாத வளாகங்கள் 'மஞ்சப்பை' விருது பெற அழைப்பு
/
'பிளாஸ்டிக்' இல்லாத வளாகங்கள் 'மஞ்சப்பை' விருது பெற அழைப்பு
'பிளாஸ்டிக்' இல்லாத வளாகங்கள் 'மஞ்சப்பை' விருது பெற அழைப்பு
'பிளாஸ்டிக்' இல்லாத வளாகங்கள் 'மஞ்சப்பை' விருது பெற அழைப்பு
ADDED : பிப் 13, 2025 12:18 AM
சென்னை,'பிளாஸ்டிக்' இல்லாத வளாகமாக மாற்றும், சிறந்த பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு, தமிழக அரசு சார்பில், 'மஞ்சப்பை விருது' வழங்கப்படுகிறது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற்றாக, மஞ்சப்பை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவித்து, சிறப்பாக செயல்படும் மூன்று பள்ளிகள், மூன்று கல்லுாரிகள், மூன்று வணிக வளாகங்களுக்கு, இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன.
முதல் பரிசு 10 லட்சம், இரண்டாம் பரிசு 5 லட்சம், மூன்றாம் பரிசாக 3 லட்சம் ரூபாயாக வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பத்தை, மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள், சென்னை கலெக்டரிடம், மே 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.