ADDED : பிப் 23, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முரளி, 23. இவர், ஆவடியைச் சேர்ந்த, எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி, அவரது வீட்டில் தனியாக இருந்த போது, அவருக்கு தாலி கட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரித்து, நேற்று முன்தினம் இரவு, முரளியை 'போக்சோ'வில் கைது செய்து, திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.