sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தனியார் பள்ளியில் மீண்டும் விஷ வாயு கசிவு வாந்தி, மயக்கத்தால் 10 மாணவியர் பாதிப்பு

/

தனியார் பள்ளியில் மீண்டும் விஷ வாயு கசிவு வாந்தி, மயக்கத்தால் 10 மாணவியர் பாதிப்பு

தனியார் பள்ளியில் மீண்டும் விஷ வாயு கசிவு வாந்தி, மயக்கத்தால் 10 மாணவியர் பாதிப்பு

தனியார் பள்ளியில் மீண்டும் விஷ வாயு கசிவு வாந்தி, மயக்கத்தால் 10 மாணவியர் பாதிப்பு


ADDED : நவ 05, 2024 12:36 AM

Google News

ADDED : நவ 05, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர், கிராமத்தெருவில் செயல்படும் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், 1,500 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

கடந்த அக்., 25ம் தேதி, பள்ளி வளாகத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதில், 45 பேர் வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, தனியார் பள்ளி வளாகத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முகாமிட்டு, காற்றின் தரம் கண்காணிக்கும் இயந்திரங்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், எதனால் பாதிப்பு என்பது 10 நாட்களாகியும் தெரியவில்லை.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, நேற்று காலை பள்ளி திறக்கப்பட்டு, வழக்கம் போல் செயல்பட துவங்கியது.

அதேநேரம், விஷ வாயு கசிவு குறித்து எந்தவொரு விளக்கமும் தராமல் பள்ளியை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் மற்றும் கவுன்சிலர் கார்த்திக் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மாணவி திடீரென, வாந்தி, மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார்.

அங்கு கூடியிருந்த பெற்றோர் மாணவியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதை தொடர்ந்து, அடுத்தடுத்து மாணவியர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டதால், உடனடியாக ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு, மாணவியரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதில், திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனையில் ஐந்து மாணவியரும், ஆகாஷ் மருத்துவமனையில் மூன்று மாணவியரும், சுகம் மருத்துவமனையில் இரு மாணவியரும், என, 10 மாணவியர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்து, மாணவ - மாணவியரின் பெற்றோர் பள்ளி முன் குவிந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

அங்கு வந்த திருவொற்றியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், 'யாரை கேட்டு பள்ளியை திறந்தீர்கள்' என, நிர்வாகத்தை கண்டித்தார். மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், தனியார் பள்ளி கல்வி இயக்குனர் முத்துசாமி ஆகியோர், பாதிக்கப்பட்ட மாணவியரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தனர்.

பதற்றமான சூழல் நிலவியதால், வண்ணாரப்பேட்டை காவல் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

இரவு நிலவரப்படி, அரசு மருத்துவமனையில் மட்டும் நான்கு மாணவியர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மறு அறிவிப்பு வெளியாகும் வரை, பள்ளி செயல்பட வாய்ப்பில்லை என தாசில்தார் சகாயராணி தெரிவித்தார்.

செயல்படாது

சம்பவம் குறித்து, மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வு முடிவுகள் குறித்து, மறு அறிவிப்பு வெளியாகும் வரை, பள்ளி செயல்பட வாய்ப்பில்லை.சகாயராணி, தாசில்தார் - திருவொற்றியூர்.



மயக்கமடையவில்லை

இதுகுறித்து, விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, முதல்வர் வனிதா கூறியதாவது:முதலில் மாணவி, குளிர்வதாகவே கூறினார். யாரும் மயக்கம் அடையவில்லை. இப்பிரச்னைக்கு பின், பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு, மாணவர்களை அழைத்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர். பாதிப்பு ஏற்பட்ட மூன்றாவது மாடியின் நான்கு வகுப்பறையில், வகுப்புகள் செயல்படவில்லை. மாசு கட்டுபாட்டு வாரியத்தின் அறிக்கை ஏதும் கிடைக்கவில்லை. மாணவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். தீபாவளி தொடர் விடுமுறையால் பெற்றோர் கூட்டம் நடத்த முடியவில்லை. தவிர, அவர்களுடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குள் அடுத்தடுத்த பிரச்னை கிளம்பி விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us