sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காதலியை கொன்று தப்பிய காதலன் பேருந்தில் வைத்து போலீசார் கைது

/

காதலியை கொன்று தப்பிய காதலன் பேருந்தில் வைத்து போலீசார் கைது

காதலியை கொன்று தப்பிய காதலன் பேருந்தில் வைத்து போலீசார் கைது

காதலியை கொன்று தப்பிய காதலன் பேருந்தில் வைத்து போலீசார் கைது


ADDED : ஏப் 03, 2025 11:54 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்,

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், கொளத்துாரைச் சேர்ந்த புஷ்பா மகள் விக்னேஷ்வரி, 24. தனியார் தொழிற்சாலை ஊழியர்.

இவர், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த தீபன், 27, என்பவரை, காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதித்த நிலையில், இன்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி, தாயிடம் தகராறு செய்த வெளியேறிய விக்னேஷ்வரி வீடு திரும்பவில்லை. கொளத்துார் மயானம் அருகே, தலையில் பலத்த காயத்துடன், நேற்று முன்தினம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், காதலன் தீபக் தலைமறைவானதும், அவரது மொபைல் போன் அணைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை சுங்கச்சாவடி அருகே, பேருந்தில் கொண்டிருந்த தீபனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

விக்னேஷ்வரி கொலை குறித்து, தீபன், போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:

தாயிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய விக்னேஷ்வரி, என்னை அழைத்தாார். கொளத்துார் மயானம் அருகே, இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது, உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, அவர் நச்சரித்தார். இதனால், எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்து, விக்னேஷ்வரியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன்.

இவ்வாறு தீபன் வாக்குமூலம் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us